நாட்டின் மிகப்பெரிய மின்சார உற்பத்தியாளரான என்டிபிசி நிறுவனம், நாட்டின் பெருமைமிகு சிஐஐ-ஐடிசி நிலைத் தன்மை விருதுகள் 2020 என்ற விருதில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு பிரிவில் சிறந்து விளங்கியதற்கான விருதை வென்று உள்ளது.
என்டிபிசி லிமிடெட்டின் குறிப்பிடத் தகுந்த சாதனையைப் பாராட்டி பெருநிறுவன உயர் சிறப்புப் பிரிவில் அந்நிறுவனத்திற்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.
பெருநிறுவன சமூகப் பொறுப்புப் பிரிவில் சிஐஐ-ஐடிசி நிறுவனத்தால் வழங்கப்படும் மிகப்பெரிய விருது இதுவாகும்.
பெருநிறுவன உயர் சிறப்புப் பிரிவில் விருதை பெறும் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்டிபிசி ஆகும்.
2019 மற்றும் 2020 என்று தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்த விருதுகளை என்டிபிசி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆலத்தியூர் பிரிவு ‘பெருநிறுவன சமூகப் பொறுப்பு’ என்ற பிரிவில் அதன் குறிப்பிடத் தகுந்த சாதனைக்காக விருது பெற்றுள்ளது.