சியாமா பிரசாத் முகர்ஜி ருர்பன் என்ற திட்டத்தினைச் செயல்படுத்தும் 34 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலில் தெலுங்கானா முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களைப் பெற்றுள்ளன.
உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல், அடிப்படைச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட கிராமம் மற்றும் நகர்ப்புறம் மீதான தொகுப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும்.