தெற்கு சீனாவில் உள்ள கன்சோ எனுமிடத்தில் 66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கருவானது ஒரு பல் இல்லாத தெரோபாட் டைனோசர் அல்லது ஓவிரா ப்டோரோசர் ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கு பேபி யிங்லியாங் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கருவின் கண்டுபிடிப்பானது டைனோசர்களுக்கும் நவீன காலத்தியப் பறவைகளுக்கும் இடையிலான ஒரு தொடர்பைப் பற்றியக் கூடுதல் புரிதலையும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்தப் புதைபடிவமானது, கரு "மடிந்த நிலை" எனப்படும் ஒரு சுருண்ட நிலையில் இருந்தது என்ற தகவலையும் வழங்குகிறது.
பறவைகள் மத்தியில் காணப்படும் இந்த நடத்தையானது, அவை குஞ்சு பொரிக்கச் செய்வதற்கு முந்தைய நிலை என்று கருதப்படுகிறது.
நவீனப் பறவைகளின் மடிந்த நிலை என்பது அவற்றின் டைனோசர் வகையிலான மூதாதையர்களிடமிருந்து உருவாகி பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதையும் இது குறிக்கிறது.