June 10 , 2021
1523 days
880

- கல்வி அமைச்சகமானது 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
- இது பள்ளிக் கல்வி தொடர்பான 70 குறிகாட்டிகள் ரீதியாக அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை தரநிலைப்படுத்தும் ஒரு செயல்முறையாகும்.
- இது 2017-18 ஆம் ஆண்டினை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2019 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
முக்கியத் தகவல்கள்
- பஞ்சாப், சண்டிகர், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் மற்றும் கேரளா ஆகியவை 2019-20 ஆம் ஆண்டு குறியீட்டில் A++ எனும் உயர்தரப் பிரிவில் இடம் பெற்றுள்ளன.
- டெல்லி, குஜராத், ஹரியானா, இராஜஸ்தான், புதுச்சேரி, தாத்ரா & நகர் ஹவேலி ஆகியவை A+ எனும் பிரிவில் இடம்பெற்றுள்ளன.
- பஞ்சாப் மாநிலமானது ஆளுகை மற்றும் மேலாண்மை ரீதியாக அதிக மதிப்புகளைப் பெற்றுள்ளது.
- பீகார் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற அடிப்படையில் குறைவான மதிப்பினையே பெற்றுள்ளன.

Post Views:
880