தக்க சட்ட முறைப்படி அல்லாமல் ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்தலானது மனித உரிமை மீறல் என்று இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றமானது சொத்துரிமை என்பது ஒரு மனித உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என்று வலியுறுத்தியுள்ளது. இந்த அரசியலமைப்பு உரிமையானது சரத்து 300ஏ என்ற விதியின் கீழ் வருகின்றது.