TNPSC Thervupettagam
July 16 , 2026 13 days 121 0
  • சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளரான பூமணி தனது 79வது வயதில் சென்னையில் காலமானார்.
  • பூமணி (இயற்பெயர் மாணிக்கவாசகம்), தென் தமிழகத்தின் கரிசல் மண்ணைக் கொண்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகச் சித்தரித்ததற்காக பெயர் பெற்றவர்.
  • சிவகாசி (1899) மற்றும் கழுகுமலை (1895) வகுப்புவாதக் கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக 2014 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார்.
  • வெக்கை, பிறகு, நைவேத்தியம், கொம்மை, வாய்க்கால், அஞ்ஞாடி ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள் மற்றும் 'கிழிசல்' என்பது இவருடைய சிறுகதைத் தொகுப்பு ஆகும்.
  • இவருடைய 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான 'அசுரன்' எடுக்கப்பட்டது என்ற நிலையில், இவர் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்காக (NFDC) 'கருவேலம்பூக்கள்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்