சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளரான பூமணி தனது 79வது வயதில் சென்னையில் காலமானார்.
பூமணி (இயற்பெயர் மாணிக்கவாசகம்), தென் தமிழகத்தின் கரிசல் மண்ணைக் கொண்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகச் சித்தரித்ததற்காக பெயர் பெற்றவர்.
சிவகாசி (1899) மற்றும் கழுகுமலை (1895) வகுப்புவாதக் கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக 2014 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார்.
வெக்கை, பிறகு, நைவேத்தியம், கொம்மை, வாய்க்கால், அஞ்ஞாடி ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள் மற்றும் 'கிழிசல்' என்பது இவருடைய சிறுகதைத் தொகுப்பு ஆகும்.
இவருடைய 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான 'அசுரன்' எடுக்கப்பட்டது என்ற நிலையில், இவர் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்காக (NFDC) 'கருவேலம்பூக்கள்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.