TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் நீலக் கொடி சான்றிதழ் விரிவாக்கம்

September 4 , 2025 2 days 39 0
  • தமிழக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறையானது நீலக் கொடி சான்றிதழுக்காக ஆறு கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்கரைகளில் சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி ஆகியவை அடங்கும்.
  • தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினம் கடற்கரை, விழுப்புரத்தில் உள்ள கீழ்புதுப்பட்டு கடற்கரை மற்றும் கடலூரில் உள்ள சாமியார்பேட்டை கடற்கரை ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு கடற்கரையும் மேம்படுத்துவதற்கு 4 கோடி ரூபாய் என மொத்தம் 24 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு நிலையான கடல் வளங்கள் மற்றும் கடல்சார்/நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது.
  • நீலக் கொடி சான்றிதழ் பெற 33 சர்வதேச அளவுருக்களுக்கு இணங்க வேண்டும்.
  • இந்த அளவுருக்கள் ஆனது கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு, சுற்றுலா வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • மெரினா கடற்கரை, சில்வர் பீச், காமேஸ்வரம் கடற்கரை மற்றும் அரியமான் கடற்கரை ஆகியவை முன்னர் தமிழ்நாடு மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டன.
  • செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரையானது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டின் முதல் நீலக் கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்