இந்தியாவானது பாகிஸ்தானுக்குச் செல்லும் தார் இணைப்பு விரைவு ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது இந்திய எல்லையின் கடைசி நிறுத்தமான முனாபாவோவைக் கடந்து பாகிஸ்தானின் கராச்சியைச் சென்றடையும்.
இந்த தார் விரைவு ரயிலானது, முன்னாள் சிந்து மெயிலின் தொடர்ச்சியாகும்.
இது 41 வருடங்களுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது.
இதர விவரங்கள்
1976 ஆம் ஆண்டு ஜுன் 28 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ரயில் தொடர்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
இது 1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து இருதரப்பு உறவை சுமூகமாக்குவதற்கான சிம்லா ஒப்பந்தத்தை அடுத்து (ஜூலை 02, 1972) கையொப்பமிடப்பட்ட து.
இந்த ஒப்பந்தமானது தார் இணைப்பு விரைவு ரயில் மற்றும் சம்ஜவுதா விரைவு இரயில் ஆகியவற்றிற்கான அடிப்படையாக அமைந்தது.
டெல்லி – லாகூர் மற்றும் ஸ்ரீநகர் - முஸாபர்ஃபாத் ஆகியவற்றிற்கான பேருந்து சேவைகள் மற்றொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலானதாகும்.