திட்டம் திவ்யாஸ்திரா எனும் திட்டத்தின் கீழ், பல இலக்குகளைத் தனித்தனியாகத் தாக்கும் (MIRV) தொழில்நுட்பத்தைக் கொண்ட அக்னி-5 எறிகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
MIRV தொழில்நுட்பமானது, ஒரே எறிகணை பல்வேறு இலக்குகளைத் தனித்தனியாகத் தாக்கக் கூடிய பல அணு ஆயுதத் தலைப்புகளைச் சுமந்து செல்ல அனுமதிக்கிறது.
இந்த எறிகணை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு, தரை மற்றும் கப்பல் சார்ந்த நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
அக்னி-5 என்பது 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாய்ந்து தாக்கக்கூடிய, அணு ஆயுதம் தாங்கிச் செல்லக்கூடிய நீண்ட தூர உந்துவிசை எறிகணையாகும்.