தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க தில்லி அரசானது தமிழ் அகாடமியை அமைத்துள்ளது.
மேலும் இது முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் தில்லி தமிழ் சங்கத்தின் தற்போதைய உறுப்பினரான N. ராஜாவை இந்த அகாடமியின் துணைத் தலைவராக நியமித்துள்ளது.
2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் செம்மொழியாக வகைப்படுத்தப்பட்ட முதல் மொழி தமிழ் ஆகும்.
டெல்லி அரசு ஏற்கனவே சமஸ்கிருதம், உருது, இந்தி, பஞ்சாபி, மைதிலி மற்றும் போஜ்புரி மொழிகளுக்கான அகாடமிகளை நடத்தி வருகிறது.
இந்தி, உருது, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகியவை டெல்லி அரசின் அலுவல்பூர்வ மொழிகள் ஆகும்.