இந்த விருதுகள் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் வழங்கப் பட்டன.
தமிழகமானது ‘சிறந்த மாநிலம்’ என்ற பிரிவின் கீழ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அப்பிரிவின் கீழ் சிறந்த மாநிலங்களாக இடம் பிடித்துள்ளன.
வேலூர் மற்றும் கருர் மாவட்டங்களுக்கு முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்கள் ‘நதிக்குப் புத்துயிர் அளித்தல்’ என்ற ஒரு துணைப் பிரிவின் கீழ் வழங்கப் பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டமானது ‘நீர்ப் பாதுகாப்பு’ என்ற பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தெற்கிற்கான ‘நீர்ப் பாதுகாப்பு’ என்ற பிரிவின் கீழ் தூத்துக்குடியைச் சேர்ந்த சாஸ்தவிநாதூர் கிராமப் பஞ்சாயத்தானது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
‘சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு’ என்ற பிரிவில் முதல் இடம் மதுரை மாநகராட்சிக்கு வழங்கப் பட்டுள்ளது.