TNPSC Thervupettagam

தொலைத்தொடர்பு சார் புத்தொழில் நிறுவனங்களுக்கான சமர்த் திட்டம்

June 20 , 2025 12 days 49 0
  • தகவல் தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) ஆனது 'சமர்த்' திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • இது தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கான ஓர் அதிநவீன தொழிற்காப்புத் திட்டமாகும்.
  • முதல் கட்டத்தில் 18 புத்தொழில் நிறுவனங்கள் போட்டிச் செயல்முறை மூலம் முதல் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்தப் புத்தொழில் நிறுவனங்களுக்கு என நிதி மானியம், முழுமையான வசதிகள் பொருத்தப் பட்ட அலுவலக இடம் மற்றும் டெல்லி மற்றும் பெங்களூரு வளாகங்களில் C-DOT மையத்தின் பல்வேறு ஆய்வக வசதிகளுக்கான அணுகல் ஆகியவை வழங்கப் படுகின்றன.
  • "சமர்த்" தொழிற்காப்புத் திட்டம் ஆனது தொலைத்தொடர்புச் செயலிகள், இணைய வெளிப் பாதுகாப்பு, 5G/6G தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, இணைய உலகம் (IoT) மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களில் செயலாற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு பெரும் முழுமையான ஆதரவை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்