TNPSC Thervupettagam

நதிப் படுகை மேலாண்மைத் திட்ட விரிவாக்கம்

April 22 , 2026 5 days 69 0
  • 2026-31 ஆம் ஆண்டிற்கான நதிப் படுகை மேலாண்மைத் (RBM) திட்டத்தை ₹2,183 கோடி மதிப்பீட்டில் தொடர்ந்து செயல்படுத்த இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.
  • இது 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு மத்திய துறை திட்டமாகும்.
  • ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நீர்வளத் துறையால் இது செயல்படுத்தப் படுகிறது.
  • இது பிரம்மபுத்திரா மற்றும் சிந்துப் பகுதிகள் போன்ற நதிப் படுகைகளில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
  • வெள்ளக் கட்டுப்பாடு, மண் அரிப்பு மேலாண்மை மற்றும் நீர்வளத் திட்டமிடல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA) போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.
  • இது படுகை திட்டமிடல், வடிகால் மேம்பாடு மற்றும் சமூகம் சார்ந்த நீர் மேலாண்மை ஆகியவற்றை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்