நிதி ஆயோக்கின் நிலையான மேம்பாட்டுக் குறியீடு 2020-2021
June 6 , 2021 1522 days 618 0
நிதி ஆயோக் அமைப்பானது, தனது 3வது நிலையான மேம்பாட்டுக் குறியீட்டினை (2020-2021) வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீடு இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.
சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பரிமாணங்கள் ரீதியில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் எந்த அளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை இந்தக் குறியீடானது மதிப்பிடுகிறது.
75 எனும் மதிப்புடன் கேரள மாநிலமானது தனது முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.
74 எனும் மதிப்புடன் இமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை தங்களது இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துள்ளன.
பீகார் மாநிலமானது மோசமான வளர்ச்சி கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.