TNPSC Thervupettagam

பட்டினி அபாயப் பகுதிகள் குறித்த அறிக்கை 2026

June 23 , 2026 3 days 69 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவை “பட்டினி அபாயப் பகுதிகள் குறித்த அறிக்கை 2026”-ஐ  (Hunger Hotspots Report) வெளியிட்டன.
  • உலகளவில் 13 அபாயப் பகுதிகளில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மோசம் அடைந்து வருவதாக இதில் எச்சரிக்கப் பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் என எதிர்பார்க்கப்படும் 13 நாடுகளை இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
  • ஆப்கானிஸ்தான், மியான்மர், தெற்கு சூடான், சோமாலியா, ஹைட்டி, சூடான், பாலஸ்தீனம், ஏமன், லெபனான், காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC), மடகாஸ்கர், நைஜீரியா மற்றும் மாலி ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.
  • கடுமையான பசி மற்றும் பஞ்சம் ஏற்படும் அபாயம் காரணமாக சூடான், தெற்கு சூடான், ஏமன், பாலஸ்தீனம், நைஜீரியா மற்றும் சோமாலியா ஆகியவை அதிக கவலைக்குரிய பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • உலகளவில் சுமார் 266 மில்லியன் மக்கள் ஏற்கனவே கடுமையான பசியை எதிர் கொண்டுள்ளனர்.
  • மோதல்கள், பொருளாதார அதிர்ச்சிகள், பருவநிலை மாற்றம், வறட்சி, வெள்ளம், நோய்ப் பரவல் மற்றும் குறைந்து வரும் மனிதாபிமான நிதியுதவி ஆகியவை இதன் முக்கிய காரணிகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்