தென்னிந்தியாவில் மிக முதன்முறையாக, சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கண்டு எடுக்கப் பட்ட சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடுகளிலிருந்து அந்தப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் முகங்களை ஆராய்ச்சியாளர்கள் மீளுருவாக்கி உள்ளனர்.
இந்த முயற்சியை மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை முன்னெடுத்து மேற்கொண்டன.
கீழடியில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள கொந்தகை புதைவிடத்தில் இருந்து மண்டை ஓடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
மண்டை ஓடுகளின் மேல் பகுதிகளை எண்ணிம முறையில் மீளுருவாக்குவதற்காக வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவு (CT ஸ்கேன்கள்) என்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன; கிடைக்கப்பெறாத தாடை எலும்புகள் நிலையான பற்சீரமைப்பு முறைகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன.
அந்தச் சமூகத்தினரின் முக அம்சங்கள் தென்னிந்திய, மேற்கு யூரேசிய மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மனிதர்களின் பண்புகளைப் பிரதிபலிக்கின்றன.
நவீன தென்னிந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட திசுக்களின் தடிமன் குறித்த தரவு ஆனது தசைகள், தோல் மற்றும் கொழுப்பு படிவு அடுக்குகளை மீளுருவாக்க உதவியது.
தோல், முடி மற்றும் கண் வண்ணங்களை மதிப்பிடுவதற்கு ஒரு புகைப்பட தரவுத்தளம் பயன்படுத்தப்பட்டது.
மரபணு வம்சாவளி மற்றும் புலம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக வேண்டி புதைவிடங்களிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ ஆனது தற்போது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கீழடியின் காலவரிசையானது, கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலாகும்.
மேலும் இந்தக் காலவரிசையானது தமிழ்நாடு தொல்பொருள் துறைக்கும் இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறைக்கும் (ASI) இடையே விவாதத்திற்குட்பட்டதாக உள்ளது.