“பர்வத்மாலா” என்ற தேசியக் கம்பிவடப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டமானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
மலைப்பாங்கான பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக 2022 /23 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சரால் இத்திட்டமானது அறிவிக்கப்பட்டது.
கடினமான மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள வழக்கமான சாலைகளுக்குப் பதிலாக, இந்தப் போக்குவரத்து வசதியானது ஒரு சுற்றுச்சூழல் ரீதியான நிலையான மாற்றாக இருக்கும்.
சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
வழக்கமான வெகுஜனப் போக்குவரத்து அமைப்புகள் கூட சாத்தியமில்லாத நெரிசலான நகர்ப்புறங்களிலும் இது செயல்படுத்தப்படும்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இதன் உருவாக்கப் பணிகளுக்குப் பொறுப்பு வகிக்கும்.