TNPSC Thervupettagam

பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொகுதிகள்

February 29 , 2020 1887 days 596 0
  • தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமானது நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டத்துடன் (Atal Innovation Mission - AIM) இணைந்து இந்தியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence - AI) அடிப்படையிலான தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • AIஐ அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொகுதியானது 5,000 அடல் மேம்படுத்து ஆய்வகங்களில் (Atal Tinkering Labs - ATL) செயல்படுத்தப்படுகின்றது. இது 2.5 மில்லியன் மாணவர்களை மேம்படுத்த இருக்கின்றது.
  • இந்தத் தொகுதியானது செயல்பாடுகள், காணொளிகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மாணவர்களுக்கு AIன் பல்வேறு கருத்துகளைக் கற்று, அதன் மூலம் பணியாற்ற மாணவர்களை அனுமதிக்கின்றது.
  • 2030 ஆம் ஆண்டில், உலகளாவிய AI சந்தை மதிப்பானது 15 - 15.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரம்பில் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பங்கு ஏறத்தாழ 1 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்