March 18 , 2021
1589 days
671
- இமாச்சலப் பிரதேசத்திலுள்ள பாராலச்சா கணவாயினை மீண்டும் திறப்பதற்கான பணியினை முதன்முறையாக எல்லையோரச் சாலை நிறுவனம் தொடங்கியுள்ளது.
- லடாக்கிலுள்ள லே பகுதியுடன் சாலை இணைப்பை மீண்டும் புனரமைப்பதற்காக இது மேற்கொள்ளப் படுகிறது.
- பாராலச்சா கணவாய் ஜான்ஸ்கர் மலைத்தொடரில் அமைந்த ஒரு உயரிய மலை கணவாய் ஆகும்.
- இது லே-மணாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசத்தின் லகௌல் மாவட்டத்தையும் லடாக்கின் லே மாவட்டத்தையும் இணைக்கிறது.
- இது பாகா ஆறு மற்றும் யமுனை ஆறு ஆகியவற்றைப் பிரிக்கும் நீர் முகடாகவும் உள்ளது.

Post Views:
671