2021 ஆம் ஆண்டு ஜுன் வரை பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனாவின் கீழ் 5 கிலோகிராம் உணவு தானியங்களை இலவசமாக வழங்க உள்ளதாக இந்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 என்ற சட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் 2020 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தினால் தொடங்கி வைக்கப் பட்டது.