இந்திய சமூகச் சீர்திருத்தவாதியான சாவித்ரி பாய் பூலேவின் பிறந்த நாளான ஜனவரி 3 ஆம் தேதியில் மகாராஷ்டிரா மாநில அரசானது மாநிலம் முழுவதும் பெண்களுக்கான இணைய வழிப் பாதுகாப்பு குறித்த ஒரு முன்னெடுப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
இந்த முன்னெடுப்பானது சமூக விரோத சக்திகளால் இணையம் பல்வேறு வகையான குற்றங்களைச் செய்வதற்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க உள்ளது.
சாவித்ரி பாய் பூலே என்பவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆவார்.