மக்களவையானது ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களின் தற்காலிக இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிதிநிலை அமர்வு வரை இந்த உறுப்பினர்கள் முன்பு இடைநீக்கம் செய்யப் பட்டிருந்தனர்.
இந்தத் தீர்மானமானது மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் என்பவரால் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.