இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையானது, மலைப் பகுதிக்கான தனது முதல் போர்ப் பயிற்சி மையத்தினை வடகிழக்குப் பகுதியில் சிக்கிமில் நிறுவியுள்ளது.
இது வடகிழக்கு இந்தியாவில் அமைந்த, மலைப்பகுதிக்கான முதல் போர்ப் பயிற்சி நிலையம் மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே இரண்டாவதுப் பயிற்சி நிலையம் ஆகும்.
இந்த வகையான முதல் நிலையமானது, 1973-74 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத்திற்கு அருகிலுள்ள அவுலி எனுமிடத்தில் திறக்கப்பட்ட மலையேறுதல் மற்றும் பனிச் சறுக்கு நிறுவனம் (M&SI) ஆகும்.
இந்தியத் திபெத்திய எல்லைக் காவல் படையானது (ITBP) சீனாவுடனான மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியினைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்கிறது.