மாநிலங்களவையில் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத அளவாக 2020 ஆம் ஆண்டில் மிகக் குறைவாக, அல்லது 33 நாட்களில் மட்டுமே அவை நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.
பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகிய நாடாளுமன்றத்தின் இரு தொடர்களின் அமர்வுகளும் கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக குறைக்கப்பட்டன.
31 அமர்வுகள் எனத் திட்டமிடப் பட்டிருந்த பட்ஜெட் கூட்டத் தொடரானது 23 அமர்வாகக் குறைக்கப் பட்டது.
அதே போன்று, மழைக்காலக் கூட்டத் தொடரானது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக 18 அமர்வுகள் மட்டுமே என திட்டமிடப் பட்டிருந்தது, ஆனால் 10 அமர்வுகள் மட்டுமே நடத்தப் பட முடிந்தது.
ஒரு ஆண்டில் 50 நாட்களுக்கும் குறைவாக மேலவை நடவடிக்கைகள் நடைபெற்றது இதுவரை 3 முறை மட்டுமே.
1999 ஆம் ஆண்டில் 48 நாட்களும் 2004 ஆம் ஆண்டில் 46 நாட்களும் 2008 ஆம் ஆண்டில் 46 அமர்வுகளும் நடைபெற்றன.
ஆனால் 2020 ஆம் ஆண்டில், மாநிலங்களவையின் செயல்திறனானது 82.7% ஆக இருந்தது, இது கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிக வருடாந்திர செயல்திறன் ஆகும்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 12 மசோதாக்களையும் மழைக்காலக் கூட்டத் தொடரின் போது 27 மசோதாக்களையும் சேர்த்து 2020 ஆம் ஆண்டில் மாநிலங்களவையினால் மொத்தம் 39 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.