கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினுடைய (IIT – Kanpur) புத்தாக்க நிறுவனங்களைக் காத்தல் மற்றும் புத்தாக்கத்திற்கான மையமானது (Starup Incubation and Innovation Centre – SIIC) மிஷன் பாரத் O2 எனும் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இது அவரசகாலத்தை எதிர்கொள்வதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் உயர்தர, விரைவான ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை 45 நாட்களுக்குள் தயாரிப்பதற்கான ஒரு சவாலாகும்.
SIIC மையமானது கடந்த ஆண்டிலும் சுவாசா N - 95 முகக் கவசம் மற்றும் நோக்கர்க் V310 சுவாசக் கருவி (Ventilator)போன்ற உள்நாட்டு உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்காக தனது காப்பு நிறுவனங்களுக்கு ஆதரவினை வழங்கியது.