TNPSC Thervupettagam

மெய்நிகர் நாணயங்கள்

March 5 , 2020 1994 days 740 0
  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ரிசர்வ் வங்கியானது மெய்நிகர் நாணயம் அல்லது பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்களில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் இருந்து வங்கி மற்றும் நிதியியல் சேவை நிறுவனங்களைத் தடை செய்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையானது நாட்டின் வர்த்தகத்தில் தலையிடுவதன் மூலம் சட்டத்தை மீறுகின்ற காரணத்தினால் உச்ச நீதிமன்றம் தற்பொழுது மெய்நிகர் நாணயங்களைக் கொண்டு வர்த்தகத்தை (தடை நீக்கம்) மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
  • மெய்நிகர் நாணயங்கள் என்பது ஒரு டிஜிட்டல் நாணயமாகும். இதற்கான குறியாக்க நுட்பங்கள் அதன் பயன்பாட்டை ஒழுங்கு படுத்துவதற்கும் அதனை வெளியிடுவதை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.
  • இது எந்தவொரு வங்கி, அரசு அல்லது மையப்படுத்தப்பட்ட நிதி அதிகாரிகளால் கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ முடிவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்