பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது (Indian Institute of Science – IISC) வெப்பத்தைத் தாங்கக் கூடிய கோவிட் – 19 தடுப்பு மருந்தின் செயல்முறையை உருவாக்கியுள்ளது.
விலங்குகள் மீது பரிசோதிக்கப்பட்ட போது தற்போது உள்ள SARS – COV – 2 வைரசின் அனைத்து மாற்றுருக்களுக்கும் எதிராக சிறப்பான செயல்திறனை இது கொண்டு உள்ளது எனக் கண்டறியப் பட்டது.
இந்த ஆராய்ச்சி பற்றிய அறிக்கையானது ACS தொற்றுநோயியல் பத்திரிக்கையில் வெளியானது.
இந்தத் தடுப்பு மருந்தானது IISC நிறுவனத்தின் உதவி பெற்ற உயிரித் தொழில்நுட்பப் புத்தாக்க நிறுவனமான மைன்வாக்சினால் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தினை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
இதனை 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 90 நிமிடங்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.