விலங்குகளின் தோலில் வரும் கட்டி (Lumpy Skin Disease – LSD) என்ற நோய்க்கான லும்பி-புரோவாக்இண்ட் என்ற உள்நாட்டிலிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
இந்த நோயானது பல மாநிலங்களில் பரவியதால், 2019 ஆம் ஆண்டு முதல் நூற்றுக் கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
லும்பி-புரோவாக்இண்ட் என்ற தடுப்பூசி, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) கீழ் உள்ள இரண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நோய் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகும்.
கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில், இந்தியாவின் தென் மாநிலங்களில் தன் தாக்கத்தினை வெளிப்படுத்தியப் பிறகு, LSD நோயின் பெருந்தொற்றானது பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
இந்நோய் பெரும்பாலும் பசுக்களிலும், சற்றே குறைவான அளவில் எருமைகளிலும் ஏற்படுகிறது.