TNPSC Thervupettagam

வடகிழக்குப் பகுதிக்கான புதிய கடல் பாதை

May 24 , 2025 17 days 67 0
  • தற்போது முன்மொழியப்பட்ட ஷில்லாங் (மேகாலயா மாநிலம்) - சில்சார் (அஸ்ஸாம்) நெடுஞ்சாலையானது மியான்மரில் முக்கியப் பல்நோக்குப் போக்குவரத்து திட்டத்தின் தொடர்ச்சியாக செயல்படும் என்று கூறப்படுகிறது.
  • இது வங்காளதேசத்தைத் தவிர்த்து, வடகிழக்கு மற்றும் கொல்கத்தா இடையேயான புதிய கடல் சார் பாதையை வழங்குகிறது.
  • இந்த வழித்தடமானது, மியான்மர் நாட்டில் உள்ள கலாதான் பல்நோக்கு இடைவழி போக்குவரத்துத் திட்டத்துடன் இணைக்கும்.
  • இது கொல்கத்தா கடல் சார் துறைமுகத்தை மியான்மரின் ரக்கைன் மாகாணத்தின்  கலாதான் ஆற்றில் உள்ள சிட்வி துறைமுகத்துடன் இணைக்கிறது.
  • இதில் சிட்வி என்ற துறைமுகமானது, உள்நாட்டு நீர்வழி மூலமாக மியான்மரில் உள்ள பலேத்வாவுடனும், சாலை வழியின் மூலமாக மிசோரமில் உள்ள சோரின்புய் உடனும் இணைகிறது.
  • இதில் சில்சார் ஆனது மிசோரம், திரிபுரா மற்றும் மணிப்பூர் மற்றும் அசாமின் பராக் பள்ளத்தாக்குப் பகுதியை இணைப்பதற்கான ஒரு நுழைவுப் பகுதியாக இருப்பதால் ஷில்லாங் - சில்சார் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • இதில் மேகாலயாவில் ஷில்லாங்கிற்கு அருகிலுள்ள மவ்லிங்க்குங்கிலிருந்து அசாமில் சில்சார் அருகே உள்ள பஞ்ச்கிராம் வரையில் 6வது தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 166.8 கிலோ மீட்டர் நீளமுள்ள, 4 வழி, அதிவேக வழித்தடத்தினை கட்டமைக்க மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்