வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் இணையவெளிப் பாதுகாப்பு குழுமத்தில் இணைந்த முதல் ஆசிய நாடு
May 14 , 2022 1086 days 483 0
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கூட்டுறவு இணையவெளிப் பாதுகாப்புச் சிறப்பு மையத்தில் இணைந்த முதல் ஆசிய நாடாக தென் கொரியா மாறியுள்ளது.
தென் கொரியாவின் தேசியப் புலனாய்வுச் சேவை அமைப்பானது இந்த மையத்தில் பங்காற்றும் பங்கேற்பு நாடாக இணைந்துள்ளது.
இப்போது, இந்த மையமானது அதன் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக 32 நாடுகளைக் கொண்டுள்ளது.
இதில் 27 வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகள் மற்றும் 5 ஐந்து வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினைச் சாராத நாடுகள் பங்கேற்பு நாடுகளாக உள்ளன.
தென் கொரியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான வருடாந்திர சர்வதேச நேரடி தீவிர இணையவெளிப்பாதுகாப்புப் பயிற்சியான 2022 ஆம் ஆண்டு லாக்ட் ஷீல்ட்ஸ் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் தென் கொரியா இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டது.