இன்னும் 75 வாரங்களில் நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகள் 75 வந்தே பாரத் இரயில்கள் மூலம் இணைக்கப் படும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற நிகழ்வின் நினைவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்பது பிரித்தானிய ஆட்சியிடமிருந்து விடுதலைப் பெற்ற 75 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையிலான மத்திய அரசின் ஒரு முன்னெடுப்பாகும்.
வந்தே பாரத் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு நடுத்தர அதிவேக இரயிலாகும்.