மத்திய அரசு மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களுக்கு வறட்சி குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நீர் சேமிப்புப் புள்ளி விவரங்களின் சராசரியை விட 20 சதவிகிதத்திற்கும் குறைவான நீர் தற்சமயம் நீர்த்தேக்கங்களில் இருப்பின் மத்திய அரசு வறட்சி குறித்த ஆலோசனையை அந்த மாநிலங்களுக்கு வழங்கும்.
அணைகள் மீண்டும் நிரம்பும் வரை தற்சமயம் அதில் உள்ள நீரை குடிநீர்த் தேவைக்காக மட்டும் பயன்படுத்துமாறு மாநிலங்களுக்கு இந்த ஆலோசனை பரிந்துரைத்துள்ளது.