கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள பல்லுயிர்களை ஆவணப் படுத்துவதற்காக தேசிய பல்லுயிர் ஆணையத்துடன் (NBA) இணைந்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (NCF), வளாக பல்லுயிர் பதிவேடு (CBR) முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA) என்பது உயிரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும், ஆலோசனை வழங்கும் மற்றும் ஊக்குவிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
கிராமம், நகரம் மற்றும் மாநகர அளவிலான பல்லுயிர் மற்றும் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்தும் மக்கள் பல்லுயிர் பதிவேட்டினால் (PBR) ஈர்க்கப்பட்டு வளாக பல்லுயிர் பதிவேடு (CBR) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் கீழ், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கணக்கெடுப்புகள், வளாக நடைகள் மற்றும் வழக்கமான அவதானிப்புகள் மூலம் பல்லுயிர்களை ஆவணப்படுத்துவார்கள்.
இந்த முன்னெடுப்பானது பல்லுயிர்த் தரவுகளைப் பதிவு செய்ய iNaturalist, eBird மற்றும் Season Watch போன்ற குடிமக்கள் அறிவியல் தளங்களைப் பயன்படுத்துகிறது.
வளாக பல்லுயிர் பதிவேடானது (CBR) பல்லுயிர் பாதுகாப்பை வலுப்படுத்துவது, சுற்றுச் சூழல் அமைப்பு மேலாண்மையை மேம்படுத்துவது மற்றும் மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்ளது.