நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாயேஜர் 1 ஆனது 1977 ஆம் ஆண்டில் தேசிய வானியக்கவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பினால் (NASA) ஏவப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் ஒளிச்செறிவு இடை மண்டலத்தினை (சூரியனின் தாக்க எல்லை) தாண்டிய பிறகு, விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் நுழைந்த முதல் விண்கலம் இதுவாகும்.
ஒரு ஒளி நாள் என்றால் ரேடியோ சமிக்ஞைகள் பூமிக்கும் வாயேஜர் 1 கலத்திற்கும் இடையில் ஒரு பாதையில் பயணிக்க 24 மணிநேரம் ஆகும்.
வாயேஜர் 1 பூமியிலிருந்து சுமார் 16 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள மனிதனால் உருவாக்கப் பட்ட மிக தொலைதூரப் பொருள் ஆகும்.
விண்கலத்தில் அண்டக் கதிர்கள், காந்தப் புலங்கள் மற்றும் பிளாஸ்மா அலைகளை ஆய்வு செய்ய இன்னும் நான்கு செயலில் உள்ள கருவிகள் உள்ளன.