TNPSC Thervupettagam

விரைவுச் சோதனை கூட்டுப் பங்காண்மை

July 26 , 2020 1847 days 686 0
  • 30 வினாடிகளுக்குள் கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கான விரைவுச் சோதனையை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்துள்ளன.
  • இந்தியாவில் 4 வகையிலான சோதனை முறைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
  • அவை டெரா-ஹெர்ட்ஸ் அலைகளை அடிப்படையாகக் கொண்ட சுவாசச் சோதனை, குரல் சோதனை, சமவெப்பச் சோதனை மற்றும் பாலி அமினோ அமிலச் சோதனை ஆகியவையாகும்.
  • மேற்கூறிய இந்த 4 சோதனைகளும் 1 நிமிடத்திற்குள் கோவிட் – 19 வைரசின் இருப்பைக் கண்டறியும் திறன் கொண்டவைகளாகும்.
  • குரல் சோதனையானது நோயாளியின் குரலில் ஏற்படும் மாற்றம் மற்றும் அவருடைய சுவாசமுறை மோசமடைதல் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக மனிதக் குரல்களின் பதிவுகளை ஆய்வு செய்கின்றது.
  • இது டெரா-ஹெர்ட்ஸ் அலைகளைப் பயன்படுத்தி இந்த வைரஸைக் கண்டறிவதற்காக உருவாக்கப் பட்ட முறையின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்