TNPSC Thervupettagam

வெள்ளி எக்காளநாதக் கருவி மற்றும் பதாகை

November 1 , 2022 999 days 469 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், குடியரசுத் தலைவரின் மெய்க் காவலருக்கு வெள்ளி எக்காள நாதக் கருவி மற்றும் எக்காளப் பதாகையை வழங்கினார்.
  • இந்திய இராணுவத்தின் மிகப் பழமையான படைப்பிரிவான குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பிரிவானது 1773 ஆம் ஆண்டில் தலைமை ஆளுநரின் மெய்க் காப்பாளராக நிறுவப்பட்டது.
  • இந்தப் படைப்பிரிவானது, பனாரஸில் (வாரணாசி) அப்போதையத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் அவர்களால் நிறுவப்பட்டது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று, இந்தப் படைப்பிரிவானது, குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பிரிவு என மறுபெயரிடப்பட்டது.
  • 1923 ஆம் ஆண்டில், இப்படைப்பிரிவின் 150 ஆண்டுகள் பணிக்கால நிறைவினை முன்னிட்டு, அப்போதைய வைஸ்ராய் ரீடிங் பிரபு அவர்களால், குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவிற்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • அதன்பிறகு பதவியேற்ற ஒவ்வொரு வைஸ்ராயும், மெய்க்காப்பாளரிடம் வெள்ளி எக்காளநாதக் கருவி மற்றும் எக்காளப் பதாகை ஆகியவற்றை வழங்கி வந்தனர்.
  • இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1957 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளரிடம் வெள்ளி எக்காள நாதக் கருவி மற்றும் எக்காளப் பதாகையை வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்